எங்கள்
வீட்டு ரோஜா
- வெ.செல்வராஜ், பொள்ளாச்சி
மலர்கள்
இல்லாமல் தோட்டம் அழகு பெறாது. அதிலும் ரோஜா இல்லாமல் தோட்டம் முழுமை பெறாது. புதிய தோட்டம் தயாரானதும் முன்புறம் 3 ரோஜா செடிகளும்
மேற்குப்புறம் 5 செடிகளும் வைத்தேன். அதனுடன்
பழைய வீட்டில் இருந்து கொண்டு வந்த ரோஜாச்செடி
ஒன்றும் தொட்டியில். அதன் பின் மாடியில் தொட்டியில்
மேலும் 8 செடிகள் வைத்தேன். முன்புறம் வைத்த 3 செடிகளின் இருபுறமும் மாதுளை மற்றும்
ஜாதிமுல்லைச் செடிகள் வளர்ந்து விட்ட காரணத்தால் ரோஜாச் செடிகள் சரியாக வளராமல் அப்படியே
நின்றுவிட்டன. அதில் ஒன்றை எடுத்து தொட்டியில் வைத்ததில் அது நன்றாக வளர்ந்து கொண்டிருக்கிறது.
மொத்தம்
இருந்த 17 செடிகளில் ஒரு செடி காய்ந்து விட்டது, 4 செடிகள் ஊசலாடிக் கொண்டிருக்கின்றன.
பனி மற்றும் நோயின் காரணமாக சற்றே கருகிய செடிகளில்
6 செடிகள் இப்பொழுது துளிர்க்க ஆரம்பித்துவிட்டன.
6 செடிகள் நன்றாக உள்ளன. இவற்றிற்கு உரமாக
ஆட்டு எருவும் உடன் சிறிதளவு வேப்பம்புண்ணாக்கும் இடுகிறேன். அவ்வப்பொழுது மண்புழு உரமும் இட்டு வருகிறேன். ஆனால் சில செடிகளைத் தவிர மற்ற செடிகளின் வளர்ச்சி
அவ்வளவு திருப்தியாக இல்லை.
மேலே உள்ளது நிறம் மாறும் ரோஜா. சுமார் 6 வருடங்களாக தொட்டியில் இருந்து பூத்துக்கொண்டிருக்கிறது.
கீழே உள்ள செடியை பாருங்கள்.
எவ்வளவு
அழகான மலர்கள். இந்த செடி எந்தவிதமான பாதிப்பும்
இல்லாமல் தொடர்ந்து பூத்துக்கொண்டிருக்கிறது.
மற்ற மலர்கள்
எங்கள்
தோட்டத்தில் ரோஜாவைத் தவிர மேலும் சில மலர்களும் உண்டு.
செவ்வந்தி, மல்லிகை, ஜாதிமுல்லை (பிச்சிப்பூ),
செம்பருத்தி, செவ்வரளி, தங்க அரளி, மாடியில் தொட்டியில் செண்பகப்பூ மற்றும் சில அழகு
மலர்களும் உண்டு.
நன்றி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக